Header Ads



வீடு திரும்பினார் முஜீபுர் ரஹ்மான்


ஐக்கிய மக்கள் சக்தியின், இன்றைய செவ்வாய்கிழமை, 30 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் திவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தந்த முஜீபுர் ரஹ்மான், 


ஆர்ப்பாட்டத்தின் போது, என்னை இலக்கு வைத்து கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டார்களோ தெரியாது.


எனக்கு அருகில் 2 தோட்டாக்கள் வந்து விழுந்தன. இதனால் எனது நெஞ்சு எரிந்தது. கண்கள் கடுமையாக வலித்தன.


இந்நிலையில் எனக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது குண்மடைந்து வீடு திரும்பியுள்ளேன் என்றார்.


அத்துடன் காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுடன், ராசயண பதார்த்தங்கள் சேர்ந்த தோட்டக்களினால் தான் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கலாம் எனவும், இதுதொடர்பில் விசாரித்து வருவதாகவும், முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.