Header Ads



மாவீரர் அலி அல்-அத்தாரின் வீரத்தைப் போற்ற, ஸ்பானியர்கள் செய்துள்ள காரியம்


- Imran Farook -


கிரனாடாவின் கடைசி இஸ்லாமிய ராணுவ படைத் தளபதியான மாவீரர் அலி அல்-அத்தார் அவர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் ஸ்பானியர்கள் அவருக்காக லோச்சா நகரில் நிறுவியுள்ள சிலைதான் இது. 


கஸ்டாலிய படைகளை எதிர்த்து கடுமையாக போரிட்ட இவரின் வாளை இன்றளவும் ஸ்பானியர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். 


பெரும் செல்வச் செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த போதிலும், மிகவும் அடக்கமானவராக வாழ்ந்து வந்தார்.


இவரின் மகளான மரியமாவைத் தான் கிரனாடாவின் கடைசி மன்னரான அபு அப்துல்லாஹ் திருமணம் செய்திருந்தார். 


கிரனாட சாம்ராஜ்யம் கை நழுவிப் போகப் போகிறதே என்ற கவலையில் உயிர் விட்டவள்தான் இளவரசி மரீமா.!

No comments

Powered by Blogger.