Header Ads



அநுரகுமாரவின் அழகிய பேச்சை, நம்பி ஏமாற வேண்டாம் - சுஜீவ


ஹேவாஹெட்ட தொகுதியின் ஜனபவுர பொதுக்கூட்டம் தெல்தோட்டையில் நடந்த போது அங்கு சுஜீவ சேனசிங்க ஆற்றிய உரை,


ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கையோடு மாணவர்களுக்கு போசனை உணவை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பொருளாதாரத்தை வளப்படுத்தும் எமது திட்டங்களை செயற்படுத்துவதோடு, மறுபுறம் திருடர்களையும் பிடித்து சிறையில் அடைப்போம். ஆனால் கொல்லமாட்டோம். மதங்களை பின்பற்றும் எங்களுக்கு அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை. சிறை பிடிப்போம். ஆனால் கொல்லமாட்டோம். மக்களே இரத்தத்தை மாத்திரம் கோரவேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கை பிரதானி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.


அத்துடன் கண்டியில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க சட்டத்தரணிகளை சந்தித்துள்ளார். இதன்போது பொருளாதார நெருக்கடி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது சரியான,உறுதியான பதிலை வழங்காமல் அலட்டி கொண்டிருந்ததாக சட்டத்தரணிகள் எம்மிடம் கூறினர். லக்ஷ்மன் கிரியெல்லவும் இதற்கு சாட்சியாகும்.


ஆகவே அநுரகுமார திஸாநாயக்க அழகான முறையில் பேசுவதற்கு திறமையானவர். அவருடைய பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். அவர்களுக்கு அனுபவம் கிடையாது. திறமை கிடையாது. சிறந்த, அனுபவம் வாய்ந்த அணியொன்று கிடையாது. கடை ஒன்றாவது தனியாக செய்ததில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் திறமையான அனுபவம் வாய்ந்த அணி உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.