Header Ads



இப்படியும் சம்பவங்கள் நடக்கிறது


தியத்தலாவையில் தன்னியக்க (ஏ.ரி.எம்) இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு உதவிச் செய்வதாகக் கூறி, அப்பெண்ணின் அட்டையை (காட்) பெற்று, மற்றுமோர் அட்டையை கொடுத்து, சுமார் 2 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு தலைமறைவாக முயன்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேநபர், மெதவாச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் இராணுவத்தில் இருந்து விலகிச்சென்றவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


வங்கியின் தன்னியக்க இயந்திரத்தில் பணத்தை பெற்றுத்தருவதாகக் கூறி, அப்பெண்ணின் அட்டையில் இருந்து பணத்தை மீளப்பெற்று, அதனை கொடுக்காது. அப்பெண்ணிடம் மற்றுமோர் அட்டையை கொடுத்துவிட்டு, கொழும்பை நோக்கிச் சென்ற பஸ்ஸில் பணத்துடன் அந்த நபர் ஏறியுள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண், தியத்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பின்னர் விரைந்து செயற்பட்ட பொலிஸார், அந்த பஸ்ஸை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து மடக்கிப்பிடித்து, சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.