Header Ads



அடுக்குமாடியை சுத்தம் செய்தவர்களுக்கு அதிர்ச்சி


பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த 2  வகையான துப்பாக்கிகளின் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குடியிருப்பு வளாகத்தை துப்பரவு செய்யும்போது T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான கழிவறை அமைப்பை சுத்தம் செய்துள்ளனர்.


இதன் போதே தோட்டாக்களை அவதானித்து பொரளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தோட்டாக்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.