Header Ads



அரசாங்கத்தின் உத்தேச சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி எதிர்ப்பு


நாளை -23- பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கெதிராக இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் சத்யாகிரக போராட்டம் என்பன இடம்பெற்றன. கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது


குறித்த ஆர்ப்பாட்டத்திலும் பின்னர் சத்தியாகிரக போராட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கலந்து கொண்டிருந்தார்


மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் ஆரம்பமான கண்டன பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடைந்தது காந்தி பூங்காவில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சத்யா கிரக போராட்டங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆண்கள் பெண்கள் தமிழ் முஸ்லிம் என பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்

No comments

Powered by Blogger.