Header Ads



ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டால், பொதுஜன முன்னணி அவரையே ஆதரிக்கும்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அவரையே ஆதரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவாகியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது பிரச்சினையில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாடு தற்பொழுது வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், இதன் கௌரவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே சென்றடைய வேண்டுமென திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் அதிகாரபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.