Header Ads



ஆண்டின் கடமை செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வு


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -


அரசாங்கத்தின் நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2024ம் ஆண்டின் கடமை செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வு நாடலாவிய ரீதியில் இன்று (01.01.2024) திங்கள் கிழமை  ஆரம்பமானது.


இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த புதிய ஆண்டினை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம் பெற்றது.


தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் வகையில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தப்பட்டதுடன் நடைமுறை ஆண்டிற்கான கடமை சபதமும் நிறைவேற்றப்பட்டது.


'பொது மக்கள் சேவை வினைத்திறனாக்கள் மற்றும் அலுவலக முகாமைத்துவ பயிற்சி வகுப்பும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீனினால் நடாத்தப்பட்டது.


இந் நிகழ்வுகளில் பதில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.