Header Ads



அரசாங்கத்தை விரட்டியடிக்காது திரும்ப மாட்டோம் - மரிக்கார்


அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி மக்களை வீதிக்கு இறக்குவோம், அதன்பின்னர் அரசாங்கத்தை விரட்டியடிக்காது திரும்ப மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (11)  வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசனையை இல்லாது செய்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


வற் வரி மக்களுக்கு தெரியவில்லை என்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார். வெளியில் சென்று பார்த்தால் அவருக்கு நடப்பது என்ன என்று தெரியும். வரிகளை அதிகரிக்க முன்னர் ஆய்வுகளை செய்தே அதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்நிலையில் மக்கள் நாளாந்தம் உணவுக்காக கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 மில்லியன் மக்களில் 11 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களோ மக்களின் பிரச்சினைகள் எதுவும் தெரியாததைபோன்று இருக்கின்றனர்.


இதனை புரியாது நடுக்கடலில் விருந்து நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக இரண்டாவது சுற்று அடிகளை வாங்கவும் போகின்றனர். பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிடுகின்றனர். அவ்வாறு செய்துகொண்டே ஒன்லைன் சட்டமூலத்தையும் கொண்டுவருகின்றனர் என்றார். 

No comments

Powered by Blogger.