Header Ads



விபத்தை தடுக்க வாகனத்தில் இருந்து பாய்ந்த சாரதி

 


கெப் வண்டி ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து சம்பவம் வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு அருகில்  நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கெப் வண்டி சாரதி வெலிகந்தை - மொனராதென்ன பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார்.


மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தின் போது கெப் வண்டி சாரதி தனது உயிரைக் காப்பாற்ற வண்டியிலிருந்து வெளியே குதித்த போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.