Header Ads



நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்


நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றில் இன்று -24- நிறைவேற்றப்பட்டுள்ளது.


  இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.


சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.


இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.

 

இதன்படி, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

No comments

Powered by Blogger.