Header Ads



"தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை" கவிதை நூல் வெளியீட்டு விழா


கவிதாயினி கே.வசந்தகுமாரி எழுதிய "தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை" கவிதை  நூல் வெளியீட்டு விழா 20. 01. 2024 சனிக் கிழமை பி.ப.4.00 மணிக்கு கொழும்பு - 07  விகார மஹா  தேவி பூங்கா முன்னால் அமைந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்தன  கலாச்சார மண்டபத்தில் சக்தி தொலைக் காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தலைமையில்  நடை பெற உள்ளது.


பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான  தமிழ் முற்போக்கு கூட்டணி அமைப்பின் தலைவர்  மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச் செம்மல் தாஜ்மஹான் பெற்றுக் கொள்வார்.


பிரபல பாடகர் இலங்கை இசை முரசு கலைக் கமல்,தேசமாண்ய சுதர்ஷன கமகே, இலங்கை நெய்னார் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் தேசபந்து சுசந்த அபேவர்தன, தொழில் அதிபர் சுபாஷ் சுந்தரராஜ், ரகு இந்திரகுமார் தொழில் அதிபர் தம்பாப் பிள்ளை பிரமேந்திர்ராசா, மற்றும் பிரபலங்களான  வேவாயுதம் ராமர், ஆ.ஹரிதாஸ் கண்ணா,


ஊடக அதிதிகளாக வீரகேசரி பிரதம ஆசிரியர் ச.ஸ்ரீ கஜன், சுயாதீன ஊடக வலையமைப்பு உதவி முகாமையாளர் வ.பிரபாத் துஷ்யந்த, லேக்ஹவுஸ் திளாக் பெரேரா மற்றும் நிஷங்க  விஜயவார்த்தன மற்றும் லங்காதீபா   சமந்த யஹம்பத்  கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் ஹஸீம்டீன் மற்றும் பிரபல இலக்கியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்


இறுதி  நிகழ்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பை மட்டும் புத்தகங்கள் வழங்க உள்ளனர்.


முனீரா அபக்கர்

2024.01.17



No comments

Powered by Blogger.