Header Ads



"அனைவரும் வரி கட்டும் போது, செலுத்தும் வரியின் அளவு குறையும்"


எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். 


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,


அனைவரும் ஒன்றிணைந்து முறையாக வரி செலுத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போதைய கால கட்டம் கடினமான ஒரு கால கட்டம்.


மாத சம்பளத்தை ஒரேயடியாக கொடுக்க முடியாத காலம் இருந்தது. அவ்வளவு கஷ்டமான காலம். டொலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் கப்பல்கள் முடங்கின. அந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


நாங்கள் அமைத்த அடித்தளம் வருங்காலத்தில் வலுப்பெறும். நானும்  கஷ்டமான காலத்தை அனுபவித்து வருகிறேன்.


என் மகன் வரி விதிப்பு பற்றி என்னிடம் குறை கூறினான். அவ்வளவு வரி செலுத்த நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டேன். நான் சொன்னேன், உன் பிரச்சனை எனக்கு புரிகிறது என தெரிவித்தேன்.


ஆனால் நாட்டில் பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனையில் இருந்து மீள்வது நம் கடமை. எல்லோரும் சேர்ந்து வரி கட்டுகிறோம். எதிர்காலத்தில் அனைவரும் வரி கட்டும் போது நாங்கள் செலுத்தும் வரியின் அளவு குறையும் என குறிப்பிட்டார். 

2 comments:

  1. நிதியமைச்சின் செயலாளர் இந்த நாட்டில் வாழும் இரண்டரைக் கோடி மக்களுக்கும் ஒரேவகையான கொண்டை அணிவிக்க தயாராகின்றார். இவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். அத்தகையவர்கள் தான் இந்த பணிக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். இந்த நபரின் வெட் வரி பற்றிய வியாக்கியானம் இறுதியில் இவருடைய தொழிலுக்கே ஆப்புவைக்கும் என்பது இந்த நபருக்குத் தெரியாமலிப்பது தான் ஆச்சரியம்.

    ReplyDelete
  2. கொள்ளை அடித்து வெளி நாடுகளில் பதுக்கி வைத்து இருக்கும் கள்ள பணங்களை முதலில் கொண்டு வாருங்கள் அதற்கு பிறகு போதாமல் போனால் மக்களிடம் வழி வாங்கி எடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.