Header Ads



மூதூர் பெரிய பள்ளிவாசலின் சிறந்த முன்மாதிரி


மூதூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இம்முறை  -2024- உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் துவா பிரார்த்தனை என்பனவற்றை  ஏற்பாடு செய்திருந்தது.


இதில் மாணவர்களும், பெற்றோரும், மஹல்லாவாசிகளும் கலந்து கொண்டனர்.


 மாணவர்களை ஆன்மீக ரீதியாக ஆற்றுப்படுத்தி பரீட்சைக்கு தயார் படுத்தும் இந்த அழகிய நடைமுறையினை மேற்கொண்டிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு நல்வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.


 இன்றைய நிகழ்வானது   பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது மதார் முஹம்மது ரஃபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ஷெயாஹ் ஆஸிம் ஹாபில் அவர்கள் துவா பிரார்த்தனையை  மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வை  மௌலவி  சல்மான் (றவ்ழி) அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்கள்.  இவ்வைபவத்தை ஏற்பாடு செய்தோருக்கும், நாளை பரீட்சை எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்.


 எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக.


Mutur Nation 

No comments

Powered by Blogger.