மீனவரின் வலையில் சிக்கிய, பெரிய குளத்து மீன்
- ஹஸ்பர் -
கிண்ணியா பகுதியில் உள்ள மீனவரின் வலையில் பெரிய குளத்து மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது .
இன்று (12) மாலை கடலுக்கு சென்ற போது குறித்த மீனவரின் வலையில் குளத்து மீனான கனையான் மீன் ஒன்று சிக்கியுள்ளது. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் கடல் நீருடன் குளத்து நீர் கலப்பு காரணமாகவும் வெள்ள நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக குளத்து மீன் கடலில் சிக்கியுள்ளதாக மீனவர் தெரிவித்தார். குறித்த மீன் சுமார் 15 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.
Post a Comment