Header Ads



புதிய திருமண வீட்டில் அனர்த்தம் - காத்தான்குடியில் சம்பவம்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமர் ஷரீஃப் பள்ளி வீதியில் புதிதாக கட்டப்பட்ட 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற வீட்டின் மீது அருகில் இருந்த மூன்று மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், குறித்த புதிய வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டிலிருந்த  மணமகளுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று -04- காலை 7.40 மணியளவில் ஏற்பட்டிருக்கிறது


குறித்த இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடத்தில் மேல் மாடியில் உள்ள மூன்றாவது மாடியின்  ஒரு பகுதியே இடிந்து அருகில் உள்ள புதிய வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதன் காரணமாக குறைத்த வீட்டின் ஒரு பகுதி பெரும்  சேதம் அடைந்துள்ளதுடன் படுக்கை அறை பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் படுக்கையறையில் மணமகளுக்கும் மணமகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.


கடந்த பத்து நாட்களுக்கு முதல் குறித்த இல்லத்தில் திருமணம் நடைபெற்ற இந்த மையம்  குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.