Header Ads



கேலி கிண்டல் செய்து அரசியல்வாதிகளை விரட்டியடித்த மக்கள்


தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் நீர் வடிகட்டும் இயந்திர விநியோகம் தொடர்பான கலந்துரையாடலுக்காக பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் ஆகியோரை கிராம மக்கள் கேலி கிண்டல் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளகனர்.


அரசாங்கத்தினால் வழங்கப்படும் நீர் வடிகால் இயந்திரங்களைப் பெறுவதற்கு தமது தனிப்பட்ட சொத்துக்களை அவர்கள் பயன்படுத்தினார்களா என இரு அரசியல்வாதிகளிடமும் மக்கள் கேள்வி எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


அதனைத் தொடர்ந்து கிராம மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இரண்டு அரசியல்வாதிகளும் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.

No comments

Powered by Blogger.