Header Ads



அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் - ஜனாதிபதி செயலகத்திற்கு கடும் பாதுகாப்பு


இலங்கை மின்சார சபை ஊழியர்களின்   போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 


இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  


இலங்கை மின்சார சபையின் வளங்களை தனியார் மயப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான ஊழியர்கள் தொடருந்துகளில் வருகைத் தந்து போராட்டக் களத்தை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அதேவேளை, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.