ரணிலுக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டமைக்காக இவ்வாறு விருது வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருந்தார் .
இவ்வாறான ஓர் பின்னணியில் நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்டமைக்காக அவருக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டுமென டயனா கமகே தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டயானா கமகேக்கு மிக அண்மையில் நீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கின்றது. அதிலிருந்து எப்படியாவது தப்பிக் கொள்ள இனி ரணிலுக்கு பாப்ப பூசத் தொடங்கியுள்ளார். வெட்கமும் மானமும் இல்லாவிட்டால் எதனைச் செய்தாவது தனது காரியத்தைச் சாதிக்க முனைவது தான் இந்த மகோடிஸ்களின் இயல்பான பண்பு.
ReplyDelete