Header Ads



நாட்டையே தின்ற ராஜபக்ச குடும்பம், தற்போது ரணிலின் நிழலில் சுகபோகம் அனுபவிக்கிறது


பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் மனிதாபிமானப் பணியை நாம் முன்னெடுப்போம்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாக்குறுதி


யுத்த வெற்றியின் பெயரில் இந்நாட்டில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயல்பட்டு நாட்டை வங்குரோத்தாக்கி,நாட்டை அழித்து நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பம் அதில் திருப்தியடையாமல்,இன்று பொருளாதார பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் நாட்டையே தின்றுவிட்ட ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்து,அதிக விலைக்கு நானோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்த இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி,திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் இங்கு தெரிவித்தார்.


மக்கள் வீதியில் இறங்கி தமது இன்னல்களை தெரிவிக்கும் போது,பொதுச் சட்டத்தை மீறும், மிகவும் ஊழல் நிறைந்த,அடக்குமுறை ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் வேளையில்,இந்தப் பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் மனிதாபிமானப் பணியை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்னெடுக்கும் என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஹொரவ்பதானையில் நேற்று (22) இடம்பெற்ற ஜனபௌர(மக்கள் அரண்) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள்,ஏழைகள்,தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர்,அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்டு,அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


🟩வெறும் வாயாடி வீரர்கள் கோப்புகளை காட்டி மக்களை ஏமாற்றி வந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியினரே திருடர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்தனர்.


சில கட்சிகளின் தலைவர்கள் பொது மக்கள்  தலைவர்கள் அல்லர்.வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாக இருந்து கொண்டு கோப்புக் கட்டுகளை காட்டி திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தை கோருகின்றனர்.வெறும் வாய்ப்பேச்சு வீரர்களான சில தலைவர்கள் வழமை போன்று வாயடித்துக் கொண்டு இருக்கும் போது,நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் மாற்று அரசாங்கமுமான ஐக்கிய மக்கள் சக்தியும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அறிஞர்கள் பேரவை மற்றும் சட்டத்தரணிகள் சக்தி என்பன இணைந்து, உயர் நீதிமன்றத்தின் ஊடாக நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச உள்ளிட்டோரை சட்டத்தின் ஊடாக வெளிக்கொணர்ந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


🟩அமைச்சுப் பதவிகளை வகித்த வாயாடி வீரர்களால் கூட எதுவும் செய்ய முடியவில்லை.


அரிசி மாபியாவிற்கு மக்களை அடிபணியச் செய்ய விடாமல்,சிறிய மற்றும் நடுத்தர  அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவித்து, பலப்படுத்தி,விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலையை வழங்க உறுதி பூண்டுள்ளோன்.நாட்டைப் பொறுப்பேற்க நினைக்கும் மாற்றுத் தரப்பு என கூறிக் கொள்ளும் தரப்பினர் விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறினாலும்,பொதுஜன கூட்டணி அரசாங்கங்களில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்களாகப் பணியாற்றிய போதிலும்,அவர்களால் அமுல்படுத்தப்பட்ட வெற்றிகரமான விவசாயக் கொள்கை எதுவும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩வெறும் வாயாடி வீரர்களால் தான் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தனர்.


இவர்கள் அமைச்சுப் பதவிகளை வகித்தது மட்டுமன்றி,நாட்டை நாசப்படுத்திய ராஜபக்சர்களை அரியாசனம் ஏற்ற பிரச்சாரம் செய்து பாடுபட்டவர்கள் தான் இந்த மாற்று என்று கூறிக்கொள்ளும் புரட்சியாளர்கள். இவ்வாறு வந்த ராஜபக்சர்கள் மல உரம்,சேதன உரம்,நானோ உரம் போன்றவற்றை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்ததனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩நுண்கடன் வழங்கும் முதலாளிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்போம்.


நுண்கடன் வழங்கும் வட்டி முதலாளிமார்களுக்கு அடிமைப்பட்ட மக்கள் நாடு முழுவதும் உள்ளனர்.இந்த கடனில் சிக்கித் தவிக்கும் ஏழை ஜீவனோபாயத்தை காப்பாற்ற பாடுபடுவேன்.யான் ஓயா வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பக்க பலத்தை வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

No comments

Powered by Blogger.