Header Ads



வீடொன்றின் பதுங்கு குழியில் 22 இலட்சத்திற்கும் அதிகமான பணம்


கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரின் நெருங்கிய உறவினரின் வீடொன்றின் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

                                   

சந்தேக நபர் தற்போது வீரகுல பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


இவர் கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரான தற்போது வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் பெட்டா மஞ்சுவின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டில்  பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இருந்ததாகவும், வீட்டில் இருந்த பெண்ணின் கைத்தொலைபேசிகளை சோதனையிட்ட போது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்கள் மூலம் புழக்கத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

                      

பின்னர், குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டதுடன், அவர் கெஹல்பெத்தர பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.

                               

சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.