Header Ads



மரணிக்க முன், சனத் நிஷாந்த இட்ட Faceebook பதிவு


இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், தான் எதிர்பாராத வகையில் மரணிப்பதற்கு முன்பாக சனத் நிஷாந்த இன்று (24) அதிகாலை 1.37 மணிக்கு தனது Facebook கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.


Facebook பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.


“வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களை கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்.” என குறித்த வீடியோ பதிவு அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.