Header Ads



SJB யுடன் இணையவுள்ள சிலரின் பெயர் விபரங்கள் வெளியாகியது


ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கூட்டணி அமைப்பது குறித்து தனது பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் யோசனைகளைக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


அவரது குழு உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை குறிப்பிட்டு அழகப்பெரும இவ்வாறு கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், திலான் பெரேரா, நாலக கொடஹேவா மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


"எங்கள் குழுவின் உறுப்பினர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஒரு கட்சி ஜனநாயக முறையில் செயல்படும் போது இது இயற்கையானது. எங்கள் குழுவில் பிளவுகள் உள்ளன, ஆனால் எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை," என அவர் டெய்லி மிரரிடம் கூறினார்.


ஏனைய எதிர்க்கட்சிகளிலும் பிளவுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தூய்மையான மற்றும் தனது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.