Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்புக் கூட்டம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில், ஏனைய பிரதேசங்களில் போன்று, கல்முனை தொகுதியில், சாய்ந்தமருதில்  23ம் வட்டாரத்தில் 14,16.17 கிராம அலுவலர் பிரிவுகளுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் கல்முனை முன்னாள் மாநகர சபை மேயரும், உயர் பீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப் தலைமையில்  திங்கள் கிழமை(11) அவரது இல்லத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஶ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான ஏ.எல்.அப்துல் மஜீட்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதிர்,கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன்,சாய்ந்தமருது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் எம்.ஜ.எம்.பிர்தௌஸ்,மாளிகைக்காடு முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம் ஐ.இஸ்மாயில், சாய்ந்தமருது முன்னால் வேட்பாளர் பாமீ ,கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களும், மற்றும் சாய்ந்தமருது பிரதேச கட்சி முக்கியஸ்தர்களும்,ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.