Header Ads



இலங்கைக்கான சவூதி தூதுவரின், புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


ஊடக அறிக்கை 


புத்தாண்டை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும் என்பதையும், வரவிருக்கும் ஆண்டானது கடந்த ஆண்டுகளை விடவும் செழிப்பானதாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்துகிறோம். 


2024 புத்தாண்டின் வருகையானது அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை எமக்கு அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, புதிய இலக்குகள், அடைவுகள், மற்றும் புதிய உத்வேகங்களையும் கொண்டு வரட்டும்.  இரு நட்பு நாடுகளின் மக்களுக்கும் முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு ஆண்டாக வருகின்ற ஆண்டு அமைய வாழ்த்துகிறேன்.


இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

காலித் ஹமூத் அல்கஹ்தானி



No comments

Powered by Blogger.