Header Ads



உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி அறிவிப்பு

 
தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


இதன்படி, இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், குறித்த இருவரில் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


மிகிந்தலை ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனை தெரிவித்துள்ளார். 


இலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகளை சந்தோஷப்படுத்தும் நோக்கில் தம்மை கொல்ல சில தரப்பினர் சதி திட்டங்களை தீட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். 


தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மாத்திரமின்றி நேரிலும் தமக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


தாம் உண்மையை பேசுவதன் காரணமாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.