Header Ads



மஞ்சள் கோட்டில் வீதியை கடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - பசில்


சமூக வலைத்தளங்களில் தம்மீது சேறு பூசுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றமையினால், தமது மாநாடு நிறைவடைந்து வீடு செல்வோர் வீதிகளை கடக்கும் போது பாதசாரி கடவைகளில் மாத்திரம் வீதிகளை கடக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


அனைவரும் ஊருக்கு செல்லும் போது மஞ்சள் கோட்டில் வீதியை கடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேறு எந்தவொரு இடத்திலும் வீதியை கடக்க வேண்டாம்.


எம்மிடமிருந்து ஏதாவது தவறை கண்டுக்கொள்வதற்கு சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.


அதனால், நாம் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்வோம். மகிந்த ராஜபக்ச எமக்கு கற்றுக்கொடுத்த பாடத்திற்கு அமைய எமது கட்சியை முன்னுதாரணமான கட்சியாக முன்னோக்கி கொண்டு செல்வோம்.

No comments

Powered by Blogger.