Header Ads



சுனாமியில் சிக்கிய புகையிரதம், இன்று மீண்டும் இயக்கப்பட்டது


2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.


காலை 6.25 மணிக்கு மருதானை நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து புறப்பட்டது.


2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய ரயில் என்ஜின் 591 இன்று பயணிக்கின்றமை ஒரு சிறப்பு அம்சமாகும்.


591 ஆம் இலக்க என்ஜினுக்கு கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

No comments

Powered by Blogger.