Header Ads



லைப் பொண்ட் நிறுவனத்தின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய   திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் எதிர்வரும் ஞாயிறு 2023 டிசம்பர் 03 ஆம் திகதி கொத்தட்டுவயில் அமைந்துள்ள NAAS Cultural Center  இல் நடைபெற உள்ளது. 


இந்நிகழ்வு லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரைன்கோ நிறுவனத்தின் தலைவரும் நாடறிந்த சமூக சேவையாளருமான அல்.ஹாஜ் எஸ்.எல்.எம். கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். அதேவேளை இன்னும் பல சமூக நிறுவனங்களின் தலைவர்களும் சமூக நலன் விரும்பிகளும் இவ்வைபவத்தை அலங்கரிக்கவுள்ளனர். 


லைப்பாண்ட் நிறுவனம் இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும். உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.