Header Ads



மத்ரசா மாணவன், ஜனாசாவாக மீட்பு




- ரீ.எல்.ஜவ்பர்கான், Kalideen -


சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்து சபீலீற் றஷாத்  மத்ரஸாவில் இன்று (5) காத்தான்குடியை சேர்ந்த எம்.எஸ். முஷாப் (வயது-13) எனும் மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்பு.


சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு இன்று (5) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.


அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதரஸாவின் அதிபர் மீது ஏற்கனவே  பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். 


களத்திற்கு வருகைதந்த சாய்ந்தமருது பொலிஸார் கூடியிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும்,  நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


ஜனாஸா தற்பொழுது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.