Header Ads



இத்தா, புர்கா, ஹலால், வஹா­பிசம், பத்வா குறித்து ஞானசாரரின் நஞ்சு சிபாரிசுகள் கசிந்தன


முஸ்லிம் பெண் ஒரு­வரின் கணவர் மர­ணித்த பின்பு வழங்­கப்­படும் நான்கு மாதங்கள் 10 நாள் விடு­முறை (இத்தா), விவா­க­ரத்து வழங்­கப்­பட்ட பின் வழங்­கப்­படும் 3 மாத கால இத்தா விடு­முறை என்­பன இரத்துச் செய்­யப்­பட்டு அரச சேவை­யி­லுள்ள ஏனைய இன பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் விடு­முறை மாத்­தி­ரமே முஸ்லிம் பெண் அரச ஊழி­யர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்­டு­மென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தனது இறுதி அறிக்­கையில் சிபா­ரிசு செய்­துள்­ளது.


இந்த அறிக்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­ப­டாத போதிலும், விடி­வெள்ளி தகவல் அறியும் சட்டம் ஊடாக சமர்ப்­பித்த விண்­ணப்­பத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த அறிக்­கையின் பிரதி தற்­போது வழங்­கப்­பட்­டுள்­ளது.


இதற்­க­மைய இந்த அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள 43 சிபா­ரி­சு­களில் முஸ்லிம் சமூ­கத்தை இலக்­காகக் கொண்ட பல சிபா­ரி­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.


இதற்­க­மைய முஸ்லிம் பெண்கள் முழு­மை­யாக முகத்தை மறைத்து ஆடை அணி­வது தடை செய்­யப்­பட வேண்டும். இவ்­வா­றான ஆடை அணி­வதன் மூலம் அவர்கள் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு உட்­படும் சந்­தர்ப்பம் உரு­வா­கி­றது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்லிம் பெண்கள் முகம், கைகள் மற்றும் முழு உடம்­பையும் மறைத்து ஆடை அணிய வேண்­டு­மென பத்வா வழங்­கி­யுள்­ளது.


பொது இடங்­களில் முகத்தை பூர­ண­மாக மறைத்து ஆடை அணிந்து நட­மா­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். முழு­மை­யாக முகத்தை மறைத்து ஆடை அணி­வது குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு சாத­க­மாக அமைந்து விடு­கி­றது.


ஹலால் சான்­றிதழ் தொடர்பில் 2020ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 19ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்வை குழுவின் சிபா­ரி­சுகள் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.


கடை­க­ளிலும் விற்­பனை நிலை­யங்­க­ளிலும் ஹலால் சான்­றிதழ் பெற்ற உணவுப் பொருட்கள் வேறா­கவும் ஹலால் சான்­றிதழ் அற்ற உணவுப் பொருட்கள் வேறா­கவும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட வேண்டும்.


வஹா­பிஸம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் இது தொடர்­பான மார்க்கத் தீர்ப்­புகள் வழங்­கப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். இஸ்­லா­மிய அறி­ஞ­ரொ­ருவர் அல்­லது இஸ்­லா­மிய அமைப்­பொன்றின் மூலம் ‘பத்வா’ என்ற பெயரில் வழங்­கப்­படும் மத தீர்ப்­புகள் அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்­கின்­ற­மையால் அவ்­வா­றான மார்க்கத் தீர்ப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட வேண்டும்.


நியா­ய­மற்ற முறையில் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். குறிப்­பாக மக்­களின் வறுமை நிலை­யினைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு பல்­வேறு பொரு­ளா­தார வசதி வாய்ப்­பு­களை வழங்கி இவ்­வாறு மதம் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான மத மாற்­றங்­க­ளுக்கு அதி­க­மாக பௌத்த, இந்து மக்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர். கிறிஸ்­தவ மத பிரி­வுகள், முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழுக்கள் இந்­ந­ட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றன. எனவே முறை­யற்ற மத­மாற்­றங்­களைத் தடை செய்­வ­தற்கு சட்­டங்கள் கொண்டு வரப்­பட வேண்டும்.


இன, மத ரீதி­யி­லான மற்றும் பிர­தேச ரீதி­யி­லான அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். அத்­தோடு தற்­போது செயற்­படும் இவ்­வா­றான அர­சியற் கட்­சி­களை தேசிய கட்­சி­க­ளாக மாற்றிக் கொள்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான கால எல்­லைக்குள் மாற்றம் பெறாத அர­சியல் கட்­சிகள் தடை செய்­யப்­பட வேண்டும்.


தண்­டனைச் சட்டக் கோவை 365 மற்றும் 365A பிரி­வின்­படி சம­பா­லின சேர்க்­கையில் ஈடு­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­பது நீக்­கப்­பட்டு உரிய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.


இந்­நாட்டில் வாழும் சம்­பி­ர­தாய முஸ்லிம் குழு­வொன்று இஸ்­லாத்தை விட்டும் விலகிச் சென்­ற­வர்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் 1979ஆம் றவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வழங்­கப்­பட்ட மார்க்கத் தீர்ப்பு முழுமையாக செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். இது பற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அதிகாரியொருவரினால் உலமா சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனும் சிபா­ரி­சு­களும் இந்த அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. – Vidivelli

No comments

Powered by Blogger.