Header Ads



கைது செய்யப்படுவாரா கெஹலிய..?


தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இந்த மோசடியில் மேலும் ஒரு பிரதான சூழ்ச்சியாளர் செயற்பட்டுள்ளதாகவும் அவர் இன்று(29) மேலும் தெரிவித்துள்ளார்.


தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தடுப்பூசிகளை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்கள அதிகாரிகள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தரமற்ற மருந்து இறக்குமதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணி மனோஜ் கமகேவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.