Header Ads



ஒருநாளில் நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம்


அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் டிசம்பர் 23 ஆம் திகதி அன்று, சுமார் 40% அதிகரித்துள்ளது.


கடந்த 22ஆம் திகதி 140,791 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்ததாகவும் இதன் மூலம் சுமார் 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த 23ஆம் திகதி சுமார் 145,503 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் அதன் ஊடான வருமானம் சுமார் 50,174,550 ரூபாவாகும்.


கடந்த 23ஆம் திகதி பெறப்பட்ட வருமானமே இதுவரை நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் எனவும், இது ஒரு சாதாரண நாளின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 40% அதிகரிப்பு எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.