Header Ads



அல்குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவனுக்கு தங்கப்பதக்கம்


ஜக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் சர்வதேசப்பாடசாலையில் அண்மையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் இதே பாடசாலையில் கல்வி கற்கும் இலங்கை மாணவன் யமான் முஹம்மத் சப்வான் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். 


இவர் இதே பாடசாலையில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் வளவாளராக கடமையாற்றும் அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் முஹம்மத் சப்வான் (மதனி) அவர்களின் மகனாவார். 


சிறுவயதிலேயே அல்குர்ஆனை மனனமிடுவதில் யமான் தனது அதிகமான நேரத்தை கழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


(தகவல்: துபாயிலிருந்து அபு மனால்)




No comments

Powered by Blogger.