Header Ads



ரொஷானுக்கு வந்துள்ள ஆசை


ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அரசியல் தரப்புக்கள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்கு முன்மொழிந்தால், நான் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோன்று நாட்டின் இயற்கை வளங்கள், திறன்மிக்க தொழிற்படை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் போன்றவற்றை மேற்கோள் காண்பித்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக்குத் தேவையான அனைத்தும் இங்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்தோடு இவ்வளங்களை உரியவாறு செயற்திறன்மிக்க வகையில் முகாமைசெய்து பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் முழுமையான பயனை நாடு பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.


மேலும் நிலையான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு ஊழலை இல்லாதொழிப்பது மிக அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு ஏற்றவகையில் தற்போதைய கணக்காய்வு செயன்முறை நன்கு வலுப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார். 

No comments

Powered by Blogger.