Header Ads



இஸ்ரேலுடனான சகல உறவுகளையும், நிறுத்துமாறு கோரிக்கை


ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் நிறைவேற்றும் வரையில், இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கம் தீர்மானித்துள்ளதாக டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இலங்கை - பாலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினர் இன்று(08)  பாராளுமன்றத்தில் கூடிய போதே இத்தீர்மானத்திற்காக வந்துள்ளனர்.


இலங்கை - பாலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இங்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் .


அத்துடன் இந்தக் கூட்டத்தில பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ பார்க்கிர் மார்க்கார் உள்ளிட்ட பல பங்கேற்றனர்


காசாவில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.