Header Ads



பொலிஸ் வேடமணிந்து வருபவர்களால் இப்படியும் நடக்கிறது


குருநாகல் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படும் மூவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அக்கரவத்தை பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரிந்து அதே இடத்தில் உள்ள தொழிலாளர் இல்லத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 25ஆம் திகதி இரவு தானும் தனது குடும்பத்தாரும் வீட்டில் இருந்த போது மூன்று பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 


அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டைகளை சரி சரிபார்த்தவுடன் அவர்களின் ஆடைகளை கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். 


சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை முறைப்பாட்டாளர் அடையாளம் காணவில்லை என கூறியுள்ளார். 


ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.