Header Ads



தெஹிவளையில் ஒட்டகச்சிவிங்கியார் உயிரிழப்பு - தடுப்பூசி காரணமா..?


தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள இரண்டு ஒட்டகச் சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது


ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக விலங்கு மயக்க மருந்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.


நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.