Header Ads



குர்ஆனை முழுமையாக மனனம்செய்த, போராளி ஸஜ்தாவில் தியாகியானார்


-ஹைதர் அலி-


ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய குழுவை தகர்த்து விட்டு, திரும்பி வரும் வழியில் குண்டடிப்பட்டதும், இறக்கப் போகிறோம் என நன்கு தெரிந்ததும், அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்த நிலையில், உயிரிழந்த கஸ்ஸாம் படைப்பிரிவின் போராளி ”தைசிர் அபு தாயிமா” குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிஸ் என்பதை ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளார்கள்.


ஷஹீதிற்கு கிடைக்கும் ஆறு உயர் அந்தஸ்துகள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஷஹீதிற்கு (உயிர்தியாகி) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது.


1. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.

2. சொர்க்கத்தில் அவருடைய இருப்பிடம் காட்டப்படுகிறது.

3. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும்

4. மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார்.

5.கியாமத் நாள் வரும்வரை மண்ணறை வேதனையிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படுகிறார்.

6.ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.

அறிவிப்பாளர்: கைஸ் ஜுதாமீ (ரலி) 

நூல்: அஹ்மத் (17115)

No comments

Powered by Blogger.