Header Ads



காசாவில் இஸ்ரேலுக்கு பேரிழப்பு, கத்தாருடன் அவசரமாக தொடர்பு கொண்டது அமெரிக்கா


ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் முடிவடைந்து  இரண்டாம் கட்டத்தில் மோதல்கள் திரும்பியதில் இருந்து இதுவரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மனித மற்றும் சியோனிச  இராணுவ இழப்புகளின் அளவு 4 மடங்காக அதிகரித்துள்ளது.


தினமும் இஸ்ரேலிய தரப்பில், உயிர் சேதங்கள் அதிகரித்து வருகின்றன.


கடந்த 24 மணித்தியாலங்களில் காசா நகரின் ஷுஜேயா பகுதியில், பாலஸ்தீன எதிர்ப்புடனான கடுமையான போர்களில் அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கூறுகின்றன.


இந்த காரணத்திற்காக, அமெரிக்கா ஒரு புதிய போர் நிறுத்தத்திற்கு செல்ல கத்தார் நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.