Header Ads



யானை மீது பஸ் மோதி; 6 பேர் படுகாயம்


அநுராதபுரம் இப்பலோகம மஹாலுப்பள்ளம் பகுதியில் இன்று (24) காலை யானை மீது பயணிகள் பஸ் மோதியதில் 06 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கெக்கிராவயிலிருந்து அனுராதபுரம் நோக்கி தலாவ வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தின் போது பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மயிலுப்பள்ளம் பகுதியில் திடீரென வீதியைக் கடந்த காட்டு யானையுடன் குறித்த பஸ் மோதியதாகவும், காட்டு யானையை மோதிய பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.