Header Ads



துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் காயம்


றாகமை - வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு  துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.