Header Ads



இன்று 2 இஸ்ரேலிய கப்பல்களை குறிவைத்தோம், காஸா மீதான ஆக்கிரமிப்பு நிற்கும்வரை எமது தாக்குதல்கள் தொடரும்


ஏமனின் ஹூதி இயக்கம் இரண்டு இஸ்ரேலிய கப்பல்களை ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை ஏவுகணை மூலம் குறிவைத்ததாக அந்த குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இன்று -03- நாங்கள் இரண்டு இஸ்ரேலிய கப்பல்களின் இலக்கு வைத்து தாக்குதல்  மேற்கொண்டோம்.


மேலும் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிற்கும் வரை எமது கடற்படை படைகள் தொடர்ந்து இஸ்ரேலிய கப்பல்களை இலக்கு வைக்கும்.


யூனிட்டி எக்ஸ்புளோரர் மற்றும் நம்பர் ஒன்பது ஆகிய இரண்டு கப்பல்களும் ஹூதிகளின் கடற்படையின் எச்சரிக்கையை நிராகரித்த பின்னர் தாக்கப்பட்டன என்று அவர் கூறினார்.


முன்னதாக செங்கடலில் இருந்த போர்க்கப்பல் ஒன்றும் குறிவைக்கப்பட்டதாக பென்டகன் கூறியது. இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்புடைய மத்திய கிழக்கில் தொடர்ச்சியான கடல்வழித் தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கும்.


No comments

Powered by Blogger.