Header Ads



இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி


இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.


அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான "Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation" இன் இரண்டாம் தவணையாக 250 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.


வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பெயரிடப்பட்டுள்ள "RESET DPO", வேலைத்திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

 

No comments

Powered by Blogger.