Header Ads



20 கட்சிகளுடன் தொடர்பு


எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.


மேலும் 20 கட்சிகளுடன் தொடர்பு கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார தெரிவித்துள்ளார்.


இந்தக் கட்சிகளைத் தவிர, பல பொது அமைப்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. கூட்டணியில் இணையும் அனைத்து தரப்பினருடனும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட நம்புவதாக ரஞ்சித் மத்தும்பண்டார தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை மாத்திரம் தமது கூட்டணியில் இணைப்பதற்கு ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவத்தில் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படும் என செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.