Header Ads



தம்பதியினரை கொலை செய்த 19 வயது இளைஞன் பிடிபட்டான்


தம்பதியரை கொன்று பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 30 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கிளிநொச்சி, உரிட்டிகுளம் பகுதியில் தேடப்பட்டு வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குற்றச் செயலின் போது அவர் அணிந்திருந்த ஆடைகளும், திருடப்பட்ட தங்க நகையின் ஒரு பகுதியும் கிணற்றில் இருந்த பையில் காணப்பட்டது.


சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.