Header Ads



மலைத்தொடரில் சிக்கித் தவித்த 180 மாணவர்கள்


 ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


60 மாணவர்களும் 120 மாணவிகளும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும். 6 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு இந்தக் குழு மீட்கப்பட்டது.


மோசமான வானிலை காரணமாக ராகம மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 180 மருத்துவ மாணவர்கள் குழுவொன்று நேற்று ஹந்தான மலைத்தொடரில் சிக்கித் தவித்துள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக, சிக்கித் தவிக்கும் மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை, பின்னர் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.


அதன்படி பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

No comments

Powered by Blogger.