யுக்திய சோதனையின் கீழ் 14 நாட்களில் 20,797 பேர் கைது
யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் 14 நாட்களில் கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20,797 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்போது 11.6 கிலோ கிராம் ஹெராயின், 8.3 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 72,272 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
Post a Comment