Header Ads



காசாவில் 100 ஆவது ஊடகவியலாளர் வீரமரணம்


போரின் (ஒக்டோபர் - 7) தொடக்கத்திலிருந்து இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம்  தங்களின் டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளது.


இன்று -23- முகமது அபு ஹ்வைடி என்ற பத்திரிகையாளர்இ காசாவின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரரால் கொல்லப்பட்டார்.


இந்த யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மொத்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை இதுவரை 100 ஆகக் உயர்ந்தது.


போரில் வீரத் தியாகிகளான, இந்த ஊடகவியலாளர்களுக்காக பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.