Header Ads



பாலஸ்தீனியர்களுக்கு 1,000 கிலோ சிலோன் தேயிலை


சவூதி அரேபிய அமைப்புகள் ஊடாக, இலங்கை 1,000 கிலோகிராம் சிலோன் தேயிலையை பாலஸ்தீனியர்களுக்கு அனுப்பும் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். 


போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தில் இதுபோன்ற நன்கொடைகளை இலங்கை அனுப்பும் என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.